சுற்றுலாத்துறையினருக்கு போதைப்பொருள் விற்ற அறுவர் கைது.
அளுத்கம
மற்றும் பேருவளை பகுதியில் சுற்றுலாத்துறையினருக்கு போதைப்பொருள்
விற்பனைச் செய்து வந்ததாக கூறப்படும் பிரதான நபர் உட்பட ஆறுபேரை பொலிஸார்
சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அப்பகுதிகளில் பல தினங்களாக மாறுவேடத்தில் உலாவிய பொலிஸாரே மேற்படி நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் அடங்கிய 75 பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் பக்கற்றொன்று 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment