அணு சக்தியில் இயங்கக்கூடிய யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் போர்க்கப்பலில் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் போர் வீரர்கள் அடங்கிய குழு உள்ளது. இது முழுமையான ஒரு கடற்படை பிரிவுக்கு சமமானது. தற்போது சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அரபிக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிமிட்ஸ், செங்கடல் பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘’நிமிட்ஸ் போர்க்கப்பலுக்கு குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், தாக்குதல் நடத்த திட்டமிடும் சமயங்களில் அதற்கேற்ற வகையிலான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னேற்பாட்டுடன்தான் நிமிட்ஸ் போர்க்கப்பல் செங்கடல் நோக்கி விரைகிறது’’ என்றார்.
No comments:
Post a Comment