Pages

Jul 11, 2013

மகியங்கனை மஸ்ஜித் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்

கியங்கனை நகரில் உள்ள மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இனந்தெரியாத நபர்களால்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மகியங்கனையில் வசிக்கும் சகோதரர் ஒருவரை காத்தான்குடி இன்போ தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் தெரிவித்தார்,

“நேற்று இரவு தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று மகியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர்.

இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும் சேதமாகியுள்ளது.

அத்துடன் பள்ளியின் உற்பகுதிக்குள் பண்டி இறைச்சியை வீசியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு உடனடியாக மகியங்கனை பொலிசில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இரண்டு பொலிசார் பள்ளிவாயலில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல் கிடக்கும்பற்சத்தில், அது வாசகர்களுக்காக பதிவேற்றப்படும்>KI 

No comments:

Post a Comment