செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் போது சில வாக்களிப்பு நிலையங்களிலேனும் வாக்குச் சீட்டுக்கள் வெளியில் தெரியும் வகையிலான பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளை தேர்தல் திணைக்களம் அறிமுகம் செய்யவுள்ளது.
மரப் பலகையிலான வாக்குப் பெட்டிகளை பயன்படுத்துவது அதிக செலவானது என்பதால் தேர்தல் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பிளாஸ்ரிக் பெட்டிகள் பாரம் குறைந்தவை என்பதால் அவற்றைக் கையாள்வது இலகுவானது என தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
வேட்பு மனுக்களை ஜூலை 25ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை ஏற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம், அந்தந்த தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இந்த அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை, தேர்தல்கள் திணைக்களத்தில் நடந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
No comments:
Post a Comment