Pages

May 27, 2013

மாடுகள் அறுக்கப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வருவது சிரமம் - ஜோன் செனவிரட்ன


இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை தடுக்க சட்டத்தை கொண்டு வருவது சிரமமானது என அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தாம் தனிப்பட்ட ரீதியில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் இதனால் மாடுகள் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை பலவந்தமாக மத மாற்றங்களை செய்வதை விட பல்வேறு பரிசுகளை பெற்றுக்கொண்டு, வேறு மதங்களை தழுவிக்கொள்கின்றனர். அதனை தவிர்த்து கொள்வது மக்களின் கடமை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிலர் மாடுகளை சுமை ஊர்திகளில் ஏற்றி, அவற்றை கடுமையாக சித்ரவதை செய்து கொலை செய்வதை தான் மாத்திரமல்ல எவரும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment