இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை!
இரத்தினபுரி - லபுவத்த பகுதியில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.49 வயதுடைய நபரே நேற்று (08) இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருடைய தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment