மாணவியிடம் பாலியல் சேஷ்டை: நகரசபை உறுப்பினரின் முன்பிணை மனு நிராகரிப்பு

காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் மாஸ்டரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் முன்வைத்த முன்பிணை கோரும் மனுவே நேற்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். அப்துல்லா முன்னிலையே இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை, காத்தான்குடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மேற்படி நகர சபை உறுப்பினரை வாழைச்சேனையில் வைத்து பொதுமக்கள் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் மறுநாளான 23 ஆம் திகதி மடக்கிப்பிடித்தனர்.
அவரை வாழைச்சேனைப் பொலிசார் பொறுப்பேற்க மறுத்தபோது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை (ஓட்டமாவடி) தவிசாளர் ஹமீதிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையிலேயே காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், உறுப்பினர் அப்துல் லத்தீப் ஆகியோர் கல்முனைக்கு நேற்று சென்று
சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் மூலமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.
அதனைப் பரிசீலித்த நீதிபதி அப்துல்லா முன் ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்ததுடன் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.இதையடுத்து குறித்த நகர சபை உறுப்பினர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோரின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி மேடைப்பேச்சாளரும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இயங்கிவரும் தனியார்
பிரத்தியேக வகுப்புக்களில் பொருளியல் பாடம் கற்பித்து வரும் ஆசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment