Pages

Apr 7, 2013

ஒரு கோடி பெறுமதியான ஆபரணங்கள், 30லட்சம்

பணம் கைப்பற்றம்.

 சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (07) இரவு யப்பானை நோக்கி பயணிக்க தயாரான யப்பான் பிரஜையிடமிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆபரணங்களின் பெறுமதி ஒரு கோடி என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி கணிக்கப்படவில்லை எனவும் அவை 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் எனவும் லெஸ்லி காமினி கூறினார்.

No comments:

Post a Comment