Pages

Feb 10, 2013

ரிலாவின் மகரந்தப்பூக்கள் கவிதை நுால் அறிமுக விழா அட்டாளைச்சேனை அல்-முனீராவில்.@ zafny 

 

   தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் தென்றல் எப்.எம்.அறிவிப்பாளர் எஸ்.எல்.எம்.ரிலாவின் மகரந்தப்பூக்கள் கவிதை நுால் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை(09) அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் சாலிஹா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 
தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜௌபர் வரவேற்பு உரையாற்றியதன் பின்னர் ,பிறை எப்.எம்.வர்த்தகமுகாமையாளர் சிரேஸ்ட அறிவிப்பாளர் எஸ்.ரபீக் தலைமை உரையாற்றினார்,பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் அறிவிப்பாளர் பசீர் அப்துல் கையூம்  நுாலாசிரியர் பற்றி உரையாற்றியதோடு,
பிரமுகர்களாலும் அதிதிகளாலும் உரை நிகழ்த்தப்பட்டன.  நுாலின் முதல் பிரதியினை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் அவர்களுக்கு பிரதம அதிதி அவர்களால் வழங்கி வைப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச்செயலாளர் ஏ.பி.தாவூத்,பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.ஏ.முனாப்,எஸ்.எல்.முனாஸ் அக்கரப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.நஜிமுதீன் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனிபா, ஒய்வு பெற்ற அதிபர் ஏ.சீ.சைபுதீன், ஆசுகவி அனிபுடீன், ஈழமதி ஜப்பார், அதிபர்களான எம்.ஐ.எம்.அப்துல் சலாம், ஏ.எல்.கே.முகம்மட் உடகவியலாளர்களான எம்.எப்.றிபாஸ்,எஸ்.எம்.எம்.ஹனீபா,ஏ.ஜீ.ஏ.கபூர்,அதிபர் எம்.ஐ.றியாஸ்,எம்.நழிம்  உட்பட அரசியல் பிரமுகர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். 
                    
@ zafny ahamed 
(i.m)

No comments:

Post a Comment