Pages

Nov 24, 2013

கல்முனைக்கு ஹக்கிம் வருகை! சாய்ந்தமருதில் போஸ்டர்கள்!!

 கல்முனை மாநகர சபையின முதல்வராக பதவி ஏற்றுள்ள நிஸாம் காரியப்பருக்கு மேயர் ஆடை அணிவிக்கும் நிகழ்வு இன்று மாலை கல்முனையில் நடைபெற உள்ளது. இவ்வைபவத்திற்கு மு.காவின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 

இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் எவரும் பசப்பு வார்த்தைகளால் எங்கள் ஊரை ஏமாற்ற முடியாது. ஊரை ஏமாற்ற வேண்டாம், நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லை, தனியான உள்ளுராட்சி சபை காண்போம் அல்லாஹு அக்பர், போன்ற சுவரொட்டிகளை சாய்ந்தமருது பிரதேசத்தின் பல இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கின்றன. இச்சுவரொட்டிகளின் இறுதியில் சாய்ந்தமருது மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரவூப் ஹக்கிமின் வருகை முன்னிட்டு இப்போஸ்டர்கள் ஒட்டிருக்கலாம் என்ற கருத்து மக்களிடையே காணப்படுகின்றன. கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி விவகாரம் பூதாகாரமாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பேசப்பட்டமையை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment