இதன்போது பிரதேச மக்களின் சார்பாக பிள்ளையாரடி ஊறணி ஸ்ரீபுலவிப் பிள்ளையார் கோயில் நிர்வாக சபைத் தலைவரினால் மகஜரொன்று த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த மகஜரின் பிரதியை மக்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸிடம் த.தே.கூ பா.உறுப்பினர்கள் கையளித்தனர். இவ் எதிர்ப்புப் பேரணியில் "பௌத்தர்கள் அற்ற ஊரில் புத்தர் சிலை எதற்கு?" "இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு?" "புத்த பகவானை ஆக்கரமிப்புச் சின்னமாக மாற்றாதே?" "மதப்பிரச்சினையை உருவாக்கும் புத்தர் சிலை வேண்டாம்?" உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் எதிரிப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் த.தே.கூ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாலும் பொதுமக்களாலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இதனை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு மூன்று எம்பிக்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment