பொதுபல சேனாவுக்கு ஹெல உறுமய ஆதரவு: ரிஷாத் குற்றச்சாட்டு.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பேட்டி
அந்த நிகழ்வில் அவர் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று முஸ்லிம் அமைச்சர்கள் முன்கூட்டியே கேட்டுக்கொண்டிருந்தததாகவும் ரிசாத் கூறினார்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள அமைச்சரவை உபகுழு இன்று திங்கட்கிழமை கூடியுள்ளது.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் அதாவுல்லா ஆகியோருடன் தானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் டியூ குணசேகர, அமைச்சர் திஸ்ஸ வித்தாரண ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.
பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய போன்ற கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் ஹலால் உணவு முறைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் முஸ்லிம் உலமா சபையை இழிவுபடுத்தும் விதமாக அந்த அமைப்புகள் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment