70 வயதில் மரதன் ஓடி உயிரிழந்த முதியவர்!
ரம்புக்கன்ன - பத்தமுரே பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட மரதன்
ஓட்டப் போட்டியில் பங்கேற்ற முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மரதன் ஓடிக் கொண்டிருந்த வேளை, கீழே விழுந்த முதியவர் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த மரதன் ஓட்டப் போட்டி அனுபவம் அதிகம் உள்ள நபர்களுக்காக நடாத்தப்பட்டதென ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
7 கிலோ மீற்றர் தூர மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 70 வயது நபர் ஓடிக்
கொண்டிருந்த போது விழுந்து ரம்புக்கன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
உயிரிழந்தார்.
ரம்புக்கன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment