Pages

Mar 24, 2013


சம்மாந்துறையில் ஜனாதிபதி.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறைக்கு விஜயம் செய்துள்ளார். சம்மாந்துறை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன 'ஈ' கல்விமைய கட்டிடத்தினையே திறந்துவைப்பதற்காகவே அவர் சம்மாந்துறைக்கு  விஜம் மேற்கொண்டுள்ளனார்.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு முன்னெடுப்பு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் நவீன 'ஈ' கல்விமைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம் நௌஷhட் அவர்களின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இங்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, தொலைத்தொடர்புகள் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திசானாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர், சிறியாணி, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பலரும் கலந்தகொண்டனர்.

No comments:

Post a Comment